சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி தடுக்கிறார் உசிலம்பட்டி புகைப்பட கலைஞர்கள் வேதனை
Usilampatti 6-5-2020
கடந்த40 நாட்களாக வாழ்வாதாரத்தை இழந்துவாடும் மக்களுக்கு நேற்றையதினம் அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஒரு விதிமுறைகளை வகுத்தது அதனைத்தொடர்ந்து இன்றுகாலை உசிலம்பட்டி புகைப்பட கலைஞர்கள் கடையை திறந்தனர் ஆனால் உசிலம்பட்டி நகர் காவல் துறையினர் கடைகள் திறக்க அனுமதி இல்லை உடனே மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது இதனால் அனைவரும் ஒன்று திரண்டு உசிலம்பட்டி கோட்டாட்சியர் திரு ராஜ்குமாரிடம் முறையிட்டனர் கோட்டாட்சியர் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடைகள் திறக்க அனுமதி அளித்தார் அதனை தொடர்ந்து மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு செயப்பிரகாசம் அவர்கள் கூறும்போது உசிலம்பட்டி நகர் காவல் துறையினர் ஒரு விதிமுறைகளை வகுத்துளனர் உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் ஒரு விதிமுறையை வகுக்கிறது அரசின் விதிமுறைகளை நாஙகள் ஒரு போதும் மீறிசெயல்பட்டது இல்லை செயலபடபோவதுமில்லை சாமியே வரம்கொடுத்தாலும் பூசாரி தடுக்கிறார் என வேதனை யுடன் தெரிவித்தார்
Comments (0)
Facebook Comments