ஆம்ஸ்ட்ராங் கொலை இந்திய குடியரசு கட்சி ராம்தாஸ் அத்வாலே கடும் கண்டனம்

ஆம்ஸ்ட்ராங் கொலை இந்திய குடியரசு கட்சி ராம்தாஸ் அத்வாலே கடும் கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் கொலை இந்திய குடியரசு கட்சி ராம்தாஸ் அத்வாலே கடும் கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் படுகொலை.
இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) கண்டனம்

ஒரு தேசிய கட்சியின்  தமிழக மாநில தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை தலைநகரில் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சி / மிகுந்த வேதனையை தருகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அம்மையாரின் நன்மதிப்பைப் பெற்று அதன் கொள்கைகளை தமிழகம் முழுவதும் நிறைவேற்றப் பாடுபட்டு கட்சியை வளர்த்து வந்தவர்.

அவர் இன்று தனது வீட்டின் அருகிலேயே கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது
 இப்படுகொலையை இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

மற்ற வாழ்க்கை போன்று விசாரணை வளையத்தை திசை திருப்பாமல் இந்த கொலையில் ஈடுபட்டுள்ள உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து, உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என இந்திய குடியரசு கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது 

 அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம் ஏ சூசை 
இந்திய குடியரசு கட்சி (அத்வாலே)